articles

img

விவசாயிகளின் போராட்ட எழுச்சி வீச்சின் விளைவு -கே.பி.பெருமாள், மாநிலப் பொருளாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

மத்திய, பாஜக அரசு விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 2024 பிப்ரவரியில் (2.0) தில்லிக்கு புறப்பட்ட போது கடும் தடுப்புகள், போலீஸ்  தாக்குதல், கண்ணீர்புகை குண்டுகள்வீச்சு மற்றும் பெல்லட் துப்பாக்கிச்சூடு போன்றவற்றை விவசாயிகள் எதிர்கொள்ள நேர்ந்தது. இது ஓர் இளம் விவசாயியின் மரணத்திற்கு வழிவகுத்தது. ஆனாலும் விவசாயிகள் இன்னும் ஷம்பு எல்லையில் முகாமிட்டுள்ள நிலை யில் அவர்கள் தில்லியை நோக்கி செல்வதைத் தடுக்க பாதுகாப்புப்படையினரும் அந்த இடத்தில் கூடாரங்க ளை அமைத்து தங்கினர். 

விவசாயம் தொலைந்தால் வாழ்ந்து பயன் என்ன?

பஞ்சாப் விவசாயி ஒருவர் கூறுகையில், “தண்ணீர் பெற 10 முதல் 15 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியி ருந்ததால் இங்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கப் பட்டது. கழிப்பறைகளும் கட்டியுள்ளோம். இனி இங்கு  எத்தனை கழிப்பறைகள் கட்ட வேண்டும் என்பதை மோடிஜி அரசு தான் முடிவு செய்ய வேண்டும். ஐந்து வருடங்கள் அல்ல பத்து வருடங்கள் ஆனாலும் நாங்கள் இங்கு காத்திருப்போம், எங்கள் கோரிக்கை நிறைவேறிய பின்னரே வீடு திரும்புவோம்” என்றார். 

வெப்பத்தை எதிர்த்து போராட விவசாயிகள் சில கூடாரங்களில் ஏசிகள் நிறுவினர். சில கூடாரங்களில் குளிர்விப்பான் மற்றும் மின்விசிறிகள் வைத்துக் கொண்டனர். 90 வயதான விவசாயி பேசுகையில் “எங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் தங்கள் வாழ்வா தாரத்தை இழந்தால், எங்கள் விவசாயம் தொலைந் தால் நாங்கள் வாழ்வதன் பயன் என்ன?” என்றார். 

நடப்பு நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில் “நாங்கள் வாக்களிக்க திரும்பு வோம். யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிப்போம். ஆனால் மோடிக்கு வாக்களிக்கமாட்டோம். மோடி எங்களுக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளார்” என்று தெரிவித்தார்.  

அப்போது எங்கே போனார் எம்.பி.,

ஹரியானாவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி யான ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர்கள் ஒன்றிய அரசின் கொள்கைகளை கிராமங்களில் பிரச்சாரம் செய்த போது, கிராமங்களில் கடுமையான எதிர்ப்பை சந்தித்தனர்.  பாஜகவின் தற்போதைய எம்பியும், ரோஹ் டக்கின் வேட்பாளருமான அரவிந்த் சர்மாவும் சிஸ்ரௌலி கிராமத்தில் தனது பிரச்சாரத்தின் போது மக்களின் எதிர்ப்புக்கு உள்ளானார்.

கடந்த ஏப்ரல் 25 அன்று ஒரு கூட்டத்தில் விவசாய தலைவர் மோனிகாநயன் என்பவர், வேட்பாளர் அரவிந்த் சர்மாவிடம் மைக்கில் கேள்வி கேட்டார். இதனால் அரவிந்த் சர்மா மக்களிடம் பேசாமல், ஒரு பொதுக்கூட்டத்தி லிருந்து திரும்பி சென்றார். பாஜக மீதான மக்களின் கோபத்திற்கான காரணம் பற்றி ஜாட் மற்றும் தலித் பெரும்பான்மையான சிஸ்ரௌலி கிராமத்திற்கு பத்திரி கையாளர்கள் சென்று விசாரித்தனர்.

அப்போது மோனிகா பேசும்போது, “தெருக்கள் முழுவதும் சேறும், வடிகால் தண்ணீரும் தேங்கிக் கிடக்கிறது. மேலும் கிராமத்தில் உள்ள தலித் வீடுகளுக்கு மத்தியில் மிகவும் பழமையான துர்நாற்றம் வீசும் குளம் உள்ளது. இதனை பூங்காவாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் எதுவும் நடக்க வில்லை. நாங்கள் கேட்க விரும்பிய பல கேள்விகள் இருந்தன. ஆனால் நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. போராட்டத்தின் போது இக்கிராம மக்கள் தெருக்க ளில் அமர்ந்திருந்தனர். அப்போது அரவிந்த் சர்மா  எம்பி. எங்கிருந்தார்? மேலும் அவரது அரசாங்கம் கண்ணீர் புகை குண்டுகள் வீசியது. ஆனால் இன்று ஓட்டுக் கேட்டு வருகிறார். என் நோக்கம் எதிர்ப்பு தெரிவிப்பது அல்ல.  ஆனால் இந்த கேள்விகளைக் கேட்பதுதான்”என்றார். 

பஞ்சாப் ரயில் மறியல்

பஞ்சாப் - ஹரியானா விவசாயிகள் 2024 ஏப்ரல் 19இல் அம்பாலாவில் தொடர் போராட்டங்களில் ஈடு பட்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டி யாலா மாவட்டம் ஷம்பு ரயில் நிலையத்தில் விவசாயி கள் 18.4.2024 அன்று நடத்திய மறியல் காரணமாக 53 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 23 ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. 

பஞ்சாப் மாநில கிராமங்களில் பிரச்சாரம் செய்யும் பாஜக வேட்பாளர்களிடம் மோடி அரசாங்கத்தின் கொள்கைகள், விவசாயிகளின் போராட்டங்கள் மற்றும் போராட்டத்தின் போது காவல்துறையின் நடவடிக்கை கள் குறித்து விவசாயிகள் கேள்விகளை கேட்டதால் பாஜக வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் பின்னடைவை  எதிர்கொண்டனர். விவசாயிகள் பாஜக வேட்பாளர்க ளின் வீடுகளுக்கு வெளியே போராட்டங்களை நடத்தி யுள்ளனர். மே-28 அன்று பாஜகவின் அமிர்தசரஸ் வேட்பாளர் தரன்ஜித்சிங் சாந்துவின் வீட்டின் முன் விவசாயிகள் ஒருநாள் போராட்டம் நடத்தினர். 

தில்லிக்குள் நுழைய விடாத பாஜக இங்கு நுழைய தடை

ஹரியானாவில் விவசாயிகள் தங்களது கிராமங்க ளுக்குள் பாஜக வேட்பாளர்கள் நுழையக்கூடாது என்று அறிவிப்புப் பலகை வைத்திருந்தனர். அந்த  அறிவிப்புப் பலகையில் “தில்லிக்குள் விவசாயிகளை நுழையவிடாத பாஜகவிற்கு இங்கு வர தடைவிதிக்கப் படுகிறது” என்று எழுதி கிராமங்களில் தொங்கவிட்ட னர். ஹரியானாவில் பல கிராமங்களில் இதுபோன்ற அறிவிப்புப் பலகைகள் இருந்தன. இதனால் பாஜக வேட் பாளர்கள் காவல்துறையின் உதவியுடன் கிராம மக்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜாட் சமுதாய மக்கள்  அதிகம் வசிக்கும் கிராமங்களில் பாஜக வேட்பாளர் கள் உள்ளே விடும் விவகாரத்தில் கிராம மக்கள் சமர சம் செய்து கொள்ள மறுத்துவிட்டனர். 

பஞ்சாப் மாநிலங்களில் பாஜக வேட்பாளர்களை கிராமங்களில் மக்கள் அனுமதிக்காத நிகழ்வுகள் ஏராள மான கிராமங்களில் நடந்தன. இதனால் பஞ்சாப்பில் பாஜக ஒரு நாடாளுமன்ற இடத்தில் கூட வெற்றியை பெற முடியவில்லை. ஹரியானா மாநிலத்தில் பாஜக கடந்த தேர்தலில் 10 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால் இந்த தேர்தலில் விவசா யிகளின் போராட்டங்கள் நடைபெற்ற இடங்களில் பாஜக வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். பாஜகவிற்கு 5 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்க ளும் கிடைத்துள்ளன. இது விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். 

தனித்து விடப்படவில்லை...

அதே போல் உத்தரப்பிரதேசத்திலும் விவசாயி கள் போராட்டம் நடைபெற்ற இடங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. தில்லியில் நடைபெற்ற விவ சாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயி கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தலைவர்க ளில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் முக்கியமா னவர். கடந்த 2020 டிசம்பர் 1ஆம் தேதி சிங்கு எல்லை யில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் உத்த ரப்பிரதேச காவல்துறையின் தடைகளை கடந்து விவ சாயிகளை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். “விவசாயிகள் தனித்து விடப்பட்டதாக உணரக்கூடாது என்பதற்காக நான் ஆதரவளிக்க வந்துள்ளேன்”. விவ சாயிகள், தலித்துக்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று தான். நான் கூலித்தொழிலாளி குடும்பத்திலிருந்து வந்தவன். விவசாயிகளின் கோரிக் கைகளை எப்படி கைவிடுவது என்று சந்திரசேகர் ஆசாத் கேள்வி எழுப்பினார்.

அவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நகினா மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், பாஜகவின் கொள் கைகளுக்கு எதிராகவும் தலித் மக்களுக்கு ஆதரவா கவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். இத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வெற்றிக்கு பின்னால் விவசாயிகளும், பாஜகவுக்கு எதிரானவர்களும் உள்ள னர் என்பதை இத்தேர்தல் தெரியப்படுத்துகிறது. 

சண்டிகர் விமான நிலையத்திலிருந்து தில்லி சென்ற  நடிகையும், மண்டி தொகுதி எம்.பியுமான கங்கனா ரணாவத்தை சி.ஐ.எஸ்.எப் பெண் காவலர் அடித்ததாக செய்திகள் வந்தன. எதற்காக அடித்தார் என்றால் மூன்று  வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட் டம் நடத்திய போது, கங்கனா ரணாவத் அதற்கு எதிராகப் பேசினார், அறிக்கை விட்டார் என்பதற்காக நடந்தது. 

நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் எவ்வளவு பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இவை சில உதாரணங்கள். தொடர்ந்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ்.கே.எம்) நாடு முழுவ தும் மோடி அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி  வருகிறது. அதன் விளைவு இந்த நாடாளுமன்ற தேர்த லில் பாஜக கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வில்லை. இது 2020-2024 விவசாயிகளின் போராட்டங்க ளுக்கும் பேரெழுச்சிக்கும் கிடைத்த வெற்றியாகும். இன்றும் விவசாயிகள் ஷம்பு எல்லையில் போராட்டத் தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துவோம். அதன் மூலம் விவசாயிகளுக்கு விடியலை ஏற்படுத்துவோம்.